Thursday, January 10, 2008

பிறவிப்பயன்!

மானிடராய்ப் பிறத்தல் அரிது என்கிறார் அவ்வையார்.இவ்வரிய மானிடப் பிறவி கிடைத்தவர் பிறவியின் பயனுற வாழ வேண்டாமா?எவ்வாறு?அனைவருக்கும் நல்லன செய்து அல்லன செய்யாது நல்லவராய்,நன்னெறியில் நின்று,புலன்களை வெறித்துதிரிய விடாது வசப்படுத்தி,கற்றுணர்ந்து(கற்பவை கசடறக் கற்று),இறையடிவர்தம் நட்புக் கொண்டு(சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்-பஜகோவிந்தம்),உண்மையே பேசி,இறையன்புடன் வாழ வேண்டும்.

பொல்லாதவன்,நெறி நில்லாதவன்,ஐம்புலன்கள்தமை



வெல்லாதவன்,கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால்



செல்லாதவன்,உண்மை சொல்லாதவன்,நின் திருவடிக்கன்பு



இல்லாதவன்,மண்ணிலே பிறந்தேன்! கச்சியேகம்பனே!(பட்டினத்தார்).



இங்கு பட்டினத்தார் தம்மைப் பற்றி சொல்லவில்லை.நமக்காகப் பேசுகிறார். கச்சி ஏகம்பன்தான் நமக்கெல்லாம் நல்வழி காட்ட வேண்டும்

No comments: