Thursday, July 21, 2011

சூனிய சம்பாஷணை-வாழ்க்கைச் சூதாட்டம்

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பின் மீண்டும் வருகிறேன்.

கடைசிப் பதிவின் தேதி 29-03-2011.

ஏன் இத்தனை பெரிய இடைவெளி என யோசித்துப் பார்க்கிறேன்.

தனியாகக் காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் எழுதவில்லை என்றால் அதற்குக் காரணம் அவன் என்னை எழுத வைக்கவில்லை.

எதையும் செய்ய வைப்பவன் அவன்.செய்யாமல் இருக்க வைப்பவனும் அவனே!

இந்த வாழ்க்கைச் சூதாட்டத்தில்,என் உயிர் ஒரு ஆட்டக்காரன் என்றால் மறைந்திருந்து ஆடும் மற்ற ஆட்டக் காரன் அவன்தானே!

திருமூலர் சொல்கிறார்—

“காயம் பலகை கவறைந்து கண்மூன்றா
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோ ரக்கரம்
ஏய பெருமா னிருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே”

இதன் பொருள்--

மனித வாழ்க்கை ஒரு பகடை ஆட்டம் போன்றது.இதில் நம் உடல் சூதாட்டப் பலகை. ஐம்புலன்களும் பகடைகள்.முக்குணங்களும் இருந்தாடும் இடங்கள். ஐம்பத்தோரு அக்ஷரங்களும் சூதாட்டப் பலகையின் கட்டங்கள்.இந்த ஆட்டத்தின் நிகழ்வுகளை முடிவு செய்பவன் அவன்.எப்படிப் பகடைகள் போடப் படுகின்றன ,ஆட்டம் எப்படி நடைபெறுகிறது என்பது புரிந்து கொள்ள முடியாத புதிர்.

இங்கு கண் மூன்று என்பதற்கு முக்குணங்களை மட்டும் குறிக்காமல் வேறு பொருள்களையும் குறிப்பதாகக் கொள்வர்.—1)மனம்,புத்தி,அகங்காரம்2)புருவ நடு,கழுத்து, இதயம்(நனவு,கனவு,உறக்கம்) 3)இச்சா,கிரியா,ஞான சக்திகள் 4)அநாகதம்,விசுத்தி,ஆக்ஞா சக்கரங்கள் 5)பைசந்தி,மத்தியமா,வைகரி ஆகிய சப்த நிலைகள்.

(மனதில் ஒட்டும் எண்ணங்களை வாக்கியமாக்கி வெளிக் கொணர்தல் தூல வைகரி எனவும்,வெளியில் சொல்லாமல் மனதுக்குள் இருத்தும்போது அது சூக்கும வைகரி எனவும் சொல்லப்படும்.
சொல் வடிவம் பெறாத ஒரு எண்ணக் கரு, மத்தியமா எனப்படும்.இதை யோக நூல்கள் மயில் முட்டைக்கு ஒப்பிடும்.முட்டையினுள்ளே இருக்கும் கருதான் மயிலாக உருவாகிறது.எனவே வைகரி மயில்;மத்தியமா முட்டை.

இதற்கும் அடிப்படையான,எண்ணம் கருவாவதற்கு முந்தைய நிலையே பைசந்தி.)

”கவறைந்து” என்பது ஐம்புலன்களைக் குறிக்கும்.கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந் திரியங்கள் ஐந்து.(ஞானேந்திரியங்கள் என்பவை, மெய், வாய், கண், மூக்கு, செவி; கர்மேந்திரியங்கள் பாணி, பாதம்,வாக்கு,பாயுரு,உபஸ்தம்-கை, கால், வாய், எருவாய், கருவாய்)

”மறைப்பறியேனே” என்பது எவ்வாறெனில்,சீவன்,சிவன் இரண்டு ஆட்டக் காரர்களில்,சிவன் மறைந்து ஆடுகிறார்.அவர் சீவனுக்குச் சாதகமாக ஆடுகிறாரா அல்லது பாதகமாக ஆடுகிறாரா என்பது தெரிவதில்லை.எனவே சீவனுக் குள்ளேயே மறைந்துள்ள சிவனை சீவன் அறிந்து கொண்டு,சலனமற்று இருத்தல் வேண்டும்(சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை).ஆட்டத்தின் வெற்றி தோல்விகளால் பாதிக்கப் படாமல் இருக்கும் ஒரு நிலையே அது.சீவன் சிவனை அறிந்துகொள்ளும்போது சீவனும் சிவனும் ஒன்றாகின்றனர்.

17 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் ஐயா,

சீவனை சிவன் ஆட்டுற
ஆட்டம் அருமையா இருக்கு..

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர்
ஆடாதாரோ ? என்னும் அப்பர் வாக்கு
நினைவுக்கு வருகிறது..

சைவ சித்தாந்தப் பொருள் பொதிந்த இது போன்ற கட்டுரைகளை வரவேற்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி..


http://sivaayasivaa.blogspot.com/2011/07/1.html

எமது இந்தப் பதிவை படித்துவிட்டு கருத்தும் வழிகாட்டுதலும் தாருங்கள்


சிவயசிவ

மதுரை சொக்கன் said...

@சிவ.சி.மா. ஜானகிராமன் .
நன்றி அன்பரே.உங்கள் பதிவு படித்தேன்,சுவைத்தேன்,பின்னூட்டமிட்டேன்.

சி.பி.செந்தில்குமார் said...

ம் ம் குட்

இராஜராஜேஸ்வரி said...

சூனிய சம்பாஷணை-வாழ்க்கைச் சூதாட்டம்"
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

மாய உலகம் said...

சூனிய சம்பாஷணை-வாழ்க்கைச் சூதாட்டம்

எதையும் செய்ய வைப்பவன் அவன்.செய்யாமல் இருக்க வைப்பவனும் அவனே!

சரியாக சொன்னீர்கள் பகிர்வுக்கு பாராட்டுக்கள்...

மதுரை சொக்கன் said...

சி.பி.செந்தில்குமார் said...

// ம் ம் குட்//
நன்றி சிபி.

மதுரை சொக்கன் said...

இராஜராஜேஸ்வரி said...

// சூனிய சம்பாஷணை-வாழ்க்கைச் சூதாட்டம்"
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//
நன்றி இராஜராஜேஸ்வரி.

மதுரை சொக்கன் said...

மாய உலகம் said...

//சூனிய சம்பாஷணை-வாழ்க்கைச் சூதாட்டம்

எதையும் செய்ய வைப்பவன் அவன்.செய்யாமல் இருக்க வைப்பவனும் அவனே!

சரியாக சொன்னீர்கள் பகிர்வுக்கு பாராட்டுக்கள்...//
நன்றி மாய உலகம்.

வே.நடனசபாபதி said...

பைசந்தி’ நிலையிலிருந்து ‘தூல வைகரி’ நிலைக்கு வர நான்கு திங்கள் ஆனது தான் பதிவு வர தாமதத்திற்கு காரணமோ? இருப்பினும் நல்ல கருத்தைக் கொடுத்தமைக்கு நன்றி.

செங்கோவி said...

அருமையான பதிவு..ஆட்டுவிப்பவனுக்கும் ஆட்டுவிக்கப்படுபவனுக்கும் உள்ள சிக்கலான தொடர்பை திருமூலர் அருமையான உதாரணாத்துடன் விளக்கியுள்ளார்.

உங்கள் விளக்கம் மிக அருமை. நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புரிகிற மாதிரிதான் இருக்கிறது...

மதுரை சொக்கன் said...

வே.நடனசபாபதி said...

//பைசந்தி’ நிலையிலிருந்து ‘தூல வைகரி’ நிலைக்கு வர நான்கு திங்கள் ஆனது தான் பதிவு வர தாமதத்திற்கு காரணமோ? இருப்பினும் நல்ல கருத்தைக் கொடுத்தமைக்கு நன்றி.//
அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!
நன்றி சபாபதி அவர்களே.

மதுரை சொக்கன் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

//புரிகிற மாதிரிதான் இருக்கிறது...//
உங்களுக்குப் புரியாமலா?
நன்றி சௌந்தர்.

மதுரை சொக்கன் said...

செங்கோவி said...

//அருமையான பதிவு..ஆட்டுவிப்பவனுக்கும் ஆட்டுவிக்கப்படுபவனுக்கும் உள்ள சிக்கலான தொடர்பை திருமூலர் அருமையான உதாரணாத்துடன் விளக்கியுள்ளார்.

உங்கள் விளக்கம் மிக அருமை. நன்றி.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செங்கோவி.

Vasu said...

ஒரு படத்தில் கமல்ஹாசன் தன காதலியுடன் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் என்ற ஒரு ஆங்கில படம் பார்த்து விட்டு அபாரம் என்று கூறிவிட்டு பிறகு தனக்கே உரிய பாணியில் " ஒண்ணும் புரியல்லே " என்பார். அதே நிலை தான் என் நிலை . ஆட்டுவிப்பவனும் அவனே ஆடுபவனும் அவனே என்ற கருத்தினை உங்கள் பாணியில் வார்த்தைகளில் சிலம்பாடி விவரித்து உள்ளீர்கள் ... மேலும் மேலும் இது போன்ற பதிவினை எதிர்பார்க்கும் ... வாசுதேவன் ... ( இதை ஏன் நான் பேச நினைபதெல்லாம் ப்ளாக் ல் போடக்கூடாது .. பலர் படிப்பார்களே ? )

மதுரை சொக்கன் said...

Vasu said..
//( இதை ஏன் நான் பேச நினைபதெல்லாம் ப்ளாக் ல் போடக்கூடாது .. பலர் படிப்பார்களே ? )//

முன்பு தொடங்கினேன்;பின் நிறுத்தி விட்டேன்.
நன்றி வாசு.

குடந்தை அன்புமணி said...

தங்களை தொடர்பு கொள்ள- மெயில் முகவரி அல்லது தொலைபேசி எண் தாருங்கள். thambaramanbu@gmail.com