Friday, November 23, 2007

மீண்டும் வருகிறேன்!

வலைப்பதிவுலகத்திலிருந்து இரண்டு மாதம் விடுப்பில் செல்ல வேண்டியதாகி விட்டது.ஒரு தேர்வுக்காகத் தயார் செய்துகொண்டிருந்தேன்.தேர்வும் எழுதி விட்டேன்.இந்த வயதில் என்ன தேர்வு என்று நீங்கள் புருவம் உயர்த்துவது தெரிகிறது.ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சோதிடப் பட்டயப் படிப்பு முடித்து விட்ட நிலையில் கலகத்தா விஷ்வ ஜோதிஷ வித்யாபீடத்தில் ஜோதிடத்தில் ஒரு தேர்வு எழுதியுள்ளேன்.தொடர்ந்து எழுதவும் போகிறேன்.பணிஓய்வு பெற்றபின் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா?ஜோதிடத்தை ஒரு தொழிலாக இல்லாமல் ஒரு சேவையாகச் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம்.தற்போதும் அவ்வாறுதான் செய்து வருகிறேன்.
இப்போது விடுப்பு முடிந்து மீண்டும் வந்து விட்டேன்.திருமந்திரம் தொடரும்.
சந்திப்போம்.நல்லன சிந்திப்போம்.

2 comments:

cheena (சீனா) said...

மதுரைச் சொக்கரே !! நண்பரே

வருக - நல்ல பதிவுகள் வழக்கம் போல் தொடர்ந்து தருக

வாழ்த்துகள்

மதுரை சொக்கன் said...

நண்பர் சீனா அவர்களே,
வரவேற்புக்கு மிக்க நன்றி